பூட்டிய வீட்டிலிருந்து வந்த கரும்புகை: உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கைக்குழந்தை!

ஒரு வயது குழந்தையுடன் சேர்ந்து தாய் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் மொபைல் ஷோரூம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தாய், மனைவி லதா (27) மற்றும் தங்களுடைய ஒரு வயது குழந்தை நிக்சிதா ஆகியோருடன் வசித்து வருகிறார். இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்திருந்த லதாவிற்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டு வந்ததால், கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கருகலைக்கப்பட்டது.

சிகிச்சை முடிந்த நேற்று வீடு திரும்பிய நிலையில் லதாவிற்கு மீண்டும் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான லதா, நேற்று மதியம் ஒருமணியளவில் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து, தற்கொலை செய்துள்ளார். பூட்டிய வீட்டிலிருந்து கரும்புகையுடன் அலறல் சத்தம் வருவதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வேகமாக வீட்டை திறந்த போது, பலத்த தீக்காயங்களுடன் லதா இறந்து கிடப்பதையும், அவருடைய ஒரு வயது குழந்தை 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதையும் பார்த்து துடித்துபோயுள்ளனர். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை நிக்சிதா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!