ஏழை பெண்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்லாந்து பெண்!

தன் நாட்டு இளம்பெண்களை அவர்களது வறுமையை பயன்படுத்தி சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் தள்ளும் ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு 60 வயது பெண், தன் நாட்டிலுள்ள ஏழை பெண்களுக்கு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி அவர்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அவர்கள் சுவிட்சர்லாந்து வந்ததும், அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார் அந்த பெண். சுவிட்சர்லாந்திலுள்ள ஏழு மாகாணங்களிலுள்ள பாலியல் விடுதிகளில் அந்த இளம்பெண்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அவர்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்தது, அவர்களை தங்கவைத்தது முதலான செலவுகளுக்காக, அந்த இளம்பெண்கள் 30,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்கவேண்டும் என அந்த பெண் வற்புறுத்தியிருக்கிறார். நேற்று, பெர்ன் மாகாண நீதிமன்றம் ஒன்று அந்த பெண்ணுக்கு பத்து வருடமும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன், நாளொன்றிற்கு அவர் 30 ஃப்ராங்குகள் அல்லது மொத்தமாக 7,8000 ஃப்ராங்குகள் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!