சிரியாவில் எரிபொருள் லொறியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டமாஸ்கசையும், ஹான்ஸ் என்ற இடத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றி வந்த லொறி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது, அதேவழியாக வந்த இரண்டு சுற்றுலா பேருந்துகளின் மீது லொறி மோதிய நிலையில் 3 வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்தன.
இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்ததுடள் மேலும் 77 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தலைநகருக்கு அருகிலுள்ள புனித ஆலயங்களுக்கு வருகைதரும் ஷியைட் ஈராக் யாத்திரீகர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!