தேர்தல் ஒத்திவைக்கப்படாது!

கொரோனா வைரஸ் காரணமாக பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமணசிறி ரத்னாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் முதல் தடவையாக கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் கண்டறியப்பட்டதன் பின்னர் பொதுத்தேர்தல் தள்ளி வைக்கப்படும் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையிலேயே தேர்தல்கள் திணைக்களம் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.தொற்று தொடர்பில் தமது அதிகாரிகள் சுகாதார தரப்பினருடன் சந்திப்பை நடத்திவருவதாக சமணசிறி குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!