முண்டியடிக்கும் மக்கள் – அச்சம் இல்லை என்கிறார் ஆளுநர்!

வடமாகாணத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் வட மாகாண ஆளுநர் பிஎஸ்எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்த முன் ஆயத்த நடவடிக்கைகளை அடுத்து, வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியினால் அச்சத்தில் மக்கள் மேற்குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களுடன் முண்டியடிப்பதாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது வரையிலும் இவற்றுக்கான எந்தவித தட்டுப்பாடும் வடமாகாணத்தில் இல்லை என்பதை தெரிவிப்பதோடு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவசியம் ஏற்படின் கொழும்பிலிருந்து விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!