சதாசிவத்தின் சகாக்கள் முற்போக்கு கூட்டணியுடன் சங்கமம்!

சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் செயற்பட்ட முக்கிய செயற்பாட்டாளர்கள் 50 பேர் தமிழ் முற்போக்கு கூட்டணியில் இன்று (13) இணைந்துள்ளனர்.

தேசிய மலையக முன்னணியாகவே அவர்கள், முற்போக்கு கூட்டணியுடன் சங்கமித்துள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. ராதாகிருஷ்ணனை இன்று சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சதாசிவத்துடன், இக்குழுவினருக்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

குழு சஜித்துக்கு ஆதரவு வழங்கியது. இந்நிலையிலேயே பொதுத்தேர்தலில் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!