நாடாளுமன்றம் அவசியம் இல்லை! – சஜித் கோரிக்கை நிராகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்காக நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அவசியம் இல்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மிகவும் அவரசமான நிலைமையின் போது, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. தற்போது அதற்கான அவசியம் ஏற்படவில்லை. குறிப்பாக நாடாளுமன்றம் இருந்தபோது, வந்த பல அனர்த்தங்களை தடுக்க முடியாத நிலைமை இருந்தது. கொரோனாவை மட்டுப்படுத்தும் முயற்சிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!