கொரோனா இருப்பது உறுதியானோர் எண்ணிக்கை 34 ஆகியது!

இலங்கையில் மேலும் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (17) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை 34 பேர் கொரோனா தொற்றாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று கண்டறியப்பட்டவர்கள் விபரம்,

2வது கொரோனா தொற்றாளியான சுற்றுலா வழிகாட்டியின் மனைவி.
ஜேர்மனுக்கு பயணித்த கொரோனா தொற்றாளிகள் இருவருடன் பயணித்த ஒருவர்.
லண்டனில் இருந்து மட்டக்களப்புக்கு நாடு திரும்பிய ஒருவர்.
களனியை சேர்ந்த ஒருவர்.
மாரவிலயை சேர்ந்த ஒருவர்.
கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 25 வயது இளைஞன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!