ஸ்ரீ லங்கன் விமானிக்கு கொரோனா தொற்று!

ஸ்ரீ லங்கன் விமானசேவையின் கனிஷ்ட விமானி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார். குறித்த விமானி, தற்போது கொழும்பு – ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் இவர், நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவர் கூறினார்.

குறித்த விமானி, இறுதியாகச் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு விமானத்தைச் செலுத்தியுள்ளார்.இவருடன் பணியாற்றிய ஸ்ரீ லங்கன் விமானச் சேவையின் ​3 பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள், தற்போது அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

குறித்த விமானி, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் பழைய மாணவர். அந்தப் பாடசாலையில், கடந்த வார இறுதியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியைப் பார்வையிடுவதற்கும் அவர் சென்றிருந்தார்.

இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ள மற்றொரு பழைய மாணவர், குறித்த விமானியான பழைய மாணவருடன் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், சுயமாகவே தங்களது வீடுகளில் தனிமைப்பட்டிருக்குமாறு, பேஸ்புக் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!