கிளிநொச்சியில் ஊரடங்கை மீறிய 6 இளைஞர்கள் கைது!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி நகரப்பகுதியை சேர்ந்த ஆறு இளைஞர்கள் நேற்று மாலை 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்கா கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும், தவறும் பட்சத்தில் கைது நடவடிக்கைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!