இத்தாலியில் இருந்து திரும்பிய கிளிநொச்சி நபர் உள்ளிட்ட 12 பேரை தேடும் பொலிஸ்

இத்தாலியிலிருந்து இலங்கைக்கு தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் இருக்கும் 12 பேரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்காக விசேட தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பெரியவர்கள் மூவரும், 9 குழந்தைகளுதே, தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் தென்பகுதியை சேர்ந்தவர்கள்.

ஒருவர் கிளிநொச்சி வட்டக்கச்சியை பிறப்பிடமாக கொண்ட ராஜ்மிதுன் தவராசா ( 28 வயது) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!