இனங்காணப்பட்டார் 102 ஆவது நோயாளி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 101 இலிருந்து 102 ஆக உயர்ந்துள்ளது. 229 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!