16 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்! அபாய வலயத்தில் காலவரையின்றி நீடிப்பு

கொழும்பு,கம்பகா,களுத்துறை, புத்தளம் மற்றும் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட படி நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் மதியம் 12 மணிக்கு அமுல் படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை, கொழும்பு,கம்பகா,களுத்துறையில் அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை நீக்கப்படாது. புத்தளம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்“டம் தளர்த்தப்பட்டு மீண்டும் 12 மணிக்கு அமுலாகும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!