லொறிகளுக்கு அனுமதி வழங்க மஹிந்த உத்தரவு!

ஊரடங்கு உத்தரவின் போது மரக்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஏற்றிய லொறிகளை பொருளாதார மையங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

நுகர்வோருக்கு அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்லல் அவசியம் என்பதை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!