இலங்கையில் ‘கொரோனா’வுக்கு முதல் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தவரே உயிரிழந்துள்ளார். மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர், சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் எனவும் நீரிழிவு நோய் மற்றும் உயர் குருதியழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்புஇதுவாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!