113ஆக எகிறியது கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சற்று முன்னர் 113ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஏழு பேர் இன்று இனங்காணப்பட்டுள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 09 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!