யாழ்ப்பாணத்தில் மற்றொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள சுவிஸ் மதபோதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

“குறித்த அரியாலை போதகருடன் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்ததன் காரணமாக பலாலி பகுதியில் ஒரு கிழமைக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 20 நபர்களில் மேலும் 10 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இன்னும் சில மணித்தியாலங்களில் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மத போதகர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!