ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (03) பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது பிணை விதிகளை பூர்த்தி செய்ய மார்ச் 24ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பெப்ரவரி 14ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுவரைகாலமும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!