கொரோனா தொற்று: வெளிநாட்டிலேயே உயிரை விட்ட கணவன் – உடலை கூட பார்க்க முடியாத சோகம்!

இந்தியாவை சேர்ந்த புதுமாப்பிள்ளை சவுதி அரேபியாவில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே பானூர் பகுதியை சேர்ந்தவர் மம்மு. இவரது மகன் ஷப்னாஸ் (28). இவர் சவுதி அரேபியாவில் உள்ள மெதினாவில் பணி புரிந்து வந்தார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதற்காக ஊருக்கு வந்தவர். மார்ச் 3ம் திகதி மீண்டும் சவுதிக்கு சென்றார்.

அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இல்லற வாழ்க்கையை பல கனவுகளோடு தொடங்கிய ஷப்னாஸின் மனைவி ஷாஹனாஸுக்கு கணவர் இறந்த செய்தி பேரிடியாக வந்தது. மேலும் கணவரின் உடலை பார்க்க முடியாமல் அவர் கதறி அழுதார். இந்த சூழலில் ஷப்னாஸின் உடல் சவுதி அரேபியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!