மேலும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்!

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும், தமது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும், மீண்டும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார். தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!