இன்று 22 பேருக்கு பரிசோதனை! – எவருக்கும் தொற்று இல்லை

யாழ். போதனா வைத்தியசாலையில், கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனை இன்று 22 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் வவுனியா பகுதியைச் சேர்ந்த எட்டு பேருக்கும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 10 பேருக்கும் (Contact Screening ) மேற்படி ஆய்வுகூடப் பரிசோதனை செய்யப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!