20 நாட்களுக்குப் பின் வெளிக்காட்டிய கொரோனா! – குழம்பும் மருத்துவர்கள்

கொரோனா வைரஸ் உடம்பிற்குள் நுழைந்த பின்னர் நோய் அறிகுறிகள் ஏற்பட 10 நாட்கள் ஆகும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் , சிலருக்கு 20 நாட்களின் பின்னரே குறித்த நோய் அறிகுளிகள் ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

இதனால் தனிமைப்படுத்தப்படும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் மேலும் 14 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும் .

தனிமைப்படுத்தல் நிலையங்களில் சான்றிதழ் பெற்று வெளியேறும் அனைவரும் மேலும் இரண்டு வாரங்கள் தனிமைப்பட வேண்டும் . அதற்கமைய சந்தேகத்திற்குரிய எந்த நபராக இருந்தாலும் கட்டாயம் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் .

நேற்றைய தினம் அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவராகும். 21 நாட்களின் பின்னரே அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலி, தென் கொரியா, இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து இலங்கை வந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!