13 வயதாகும் குழந்தைகள்! ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண் கொரோனாவால் மரணம்…

பிரித்தானியாவில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த Shabnum Sadiq (39) என்ற பெண், குழந்தைகளுக்கு 13 வயதாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இவர் பிரித்தானியாவின் Slough பகுதியில் லேபர் கட்சி சார்பில் கௌன்சிலராக பணியாற்றி வந்த நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பாகிஸ்தானுக்கு சென்றிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

24 நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்க திணறிவந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

அவர்களுக்கு இப்போது 13 வயது ஆகும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!