யாழ்ப்பாணத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படவில்லை!

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கடந்த ஒரு வாரமாக எவரும் கொரோனா தொற்றுக் குறித்து அடையாளப்படுத்தப்படவில்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆக கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படவில்லை. அதே நேரம் கொரோனா சந்தேகத்தில் தற்போதும் 4 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!