16 மணி நேர தொடர்ச்சியான பணி! அசதியில் உறங்கிய நபர் – கொரோனாவால் இறந்தவர் என உயிருடன் தகனம்!

கொரோனா தொற்றால் இறந்தவர்களை தகனம் நிலையத்தில் ஆழ்ந்து தூங்கிய நபரை இறந்தவர் என நினைத்து தகனம் செய்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள இறுதி சடங்கு நிலையங்களில் சடலங்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இறுதிச்சடங்கு நிலையம் ஒன்றில் வேலைபார்க்கும் 48 வயதான மைக்கேல் ஜோன்ஸ் 16 மணி நேரம் தொடர்ச்சியாக வேலைப் பார்த்ததால் அசதியில் அங்கிருந்த ஸ்டெரக்சரில் அசந்து தூங்கி உள்ளார்.

அவருடன் வேலைபார்க்கும் சகஊழியர் இறந்தவரின் சடலம் என்று தவறாக நினைத்து அவரை உயிருடன் தகனம் செய்துள்ளார் என்று பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மைக்கேல் உடன் பணியாற்றும் சகப்பணியாளர் ஆன்டர்சன் கூறுகையில், மைக்கேல் உயிருடன் எரியூட்டப்பட்டப் போது அவர் வெப்பம் காரணமாக அலறி உள்ளார்.

சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று கண்டுபிடிப்பதற்குள் அவர் சாம்பாலாகி விட்டார். 1400 முதல் 1800 ஃபெரான்ஹிட் வெப்பத்தின் காரணமாக அவர் 15 நொடிகளில் உயிரிழக்க நேரிட்டது என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!