ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக ரிஷாத்தின் சகோதரர் கைது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரான, ரியாஜ் பதியுதீனை, குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

புத்தளத்தில் தங்கியிருந்த போது, இவர், நேற்றுமாலை குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்பு குழுவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இவரிடம், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!