நேற்றும் ஐவருக்கு கொரோனா!

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 5 பேர் அடையாளம் காணப்பட்டதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அடையாளம் காணப்பட்ட 5 பேரில் நால்வர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!