பலாலியில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம்- பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்றிரவு அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர், பலாலி தனிமைப் படுத்தல் நிலையத்தில் உள்ள 3 பேர், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7 பேர், நல்லூர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 பேர், மற்றும் முழங்காலில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 2 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருவரும், அரியாலையைச் சேர்ந்தவர்கள் என்றும், 60 மற்றும் 61 வயதுடைய ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!