ட்ரம்பிடம் ரணில் அவசர கோரிக்கை!

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை இடைநிறுத்தும் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டி உள்ள டொனால்ட் ட்ரம்ப் தமது நாட்டினால் குறித்த நிறுவனத்துக்கு வழங்கிய நிதியை முடக்குவதாக நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே அமெரிக்காவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க கடிதம் எழுதியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!