உலகையே அதிரவைத்த கோரம்!.. நேற்று ஒரே நாளில்… 4 ஆயிரம் பலி!.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 4,491 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியோனார் எண்ணிக்கை 32 ஆயிரத்தைக் கடந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் உயிரிழப்பு குறித்து கண்கணித்து வரும் வேர்ல்ட்ஓமீட்டர் இணையதளத்தின் கணிப்பின்படி, அமெரிக்காவில் உயிரிழப்பு 34 ஆயிரத்து 617 ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நேற்று இரவு 8.30 மணிநிலவரப்படி 4,491 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதான் அந்நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு நாளில் நிகழ்ந்த அதிகபட்ச உயிழப்பாகும்.

இதில் நியூயார்க் நகரில் மட்டும் இந்த வாரத்தில் 3 ஆயிரத்து 778 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது வியாழக்கிழமை இரவு வரை அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு கிடைத்த தகவலின்படி கொரோனா வைரஸுக்கு 24 மணிநேரத்தில் 4,141 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி 32 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதிலும் கடந்த இரு நாட்களாக உயிரிழப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு உயிழப்பைச் சந்தித்த நாடுகளிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான், அங்கு 32 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதைத்தொடர்ந்து இத்தாலியில் 22,179 பேரும், ஸ்பெயினில் 19,130 பேரும், பிரான்ஸில் 17,920 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று புதிதாக 29 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, அங்கு 6.77 லட்சமாக கொரோனா பாஸிட்டிவ் அதிகரித்துள்ளது. இதுவரை 57 ஆயிரம் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!