இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு…!

கொரோனா தொற்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மேலும் 265 நபர்களின் PCR பரிசோதனை அறிக்கைகள் இன்று (17) கிடைக்கப் பெறவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (17) கருத்துரைக்கையில் இராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குளான 238 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!