மதுபானசாலைகளுக்கு ‘சீல்’!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபானசாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு விற்பனை நிலையங்கள் முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபானசாலைகளைத் திறக்க அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மதுபானசாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகளில் உள்ள மதுபானங்களின் இருப்புக் கணக்கெடுக்கப்பட்டு முத்திரையிடப்படுகின்றன. இந்தப் பணி நேற்று வலிகாமத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மறு அறிவிப்புவரை மதுபானசாலைகளை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!