நாடாளுமன்றை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சிறிகாந்தா கோரிக்கை

நாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

மேலும் தேர்தல் நடைபெற்றால் அதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உருவாகலாம் எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!