ஜூன் 20இல் தேர்தல் – வெளியானது வர்த்தமானி !

நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20ஆம் திகதி நடத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த மார்ச் 21ஆம் திகதி அறிவித்திருந்தது.

காலவரையறையின்றி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் அழுத்தங்களை கொடுத்து வந்தது.

இந்தநிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும், சட்டவல்லுனர்களுடன், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது. இதையடுத்து, நேற்று மாலை ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தகவல் வெளியிட்டார்.

அத்துடன், ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், தேர்தல் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களின் கையெழுத்துடன் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!