ஈஸ்டர் ஞாயிறு பயங்கரத்தின் ஓராண்டு நினைவு நாள் இன்று!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினம் இன்றாகும்.

3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களை குறிவைத்து, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 250 க்கு மேற்பட்டோர் பலியானதுடன், 500 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி இன்று காலை 8.40 மணியளவில் சகல கத்தோலிக்க மக்களும் தங்களது வீடுகளில் விளக்கேற்றுமாறும், தேவாலயங்களில் மணிகளை ஒலிக்கச் செய்யுமாறும் பேராயர் வணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!