தேர்தல் அறிவிப்பு – பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்!

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கும் போது சுகாதாரத்துக்கு பாதகமான நிலை ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்து்ளார்.

ஜூன் 20 இல் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழ்நிலை இதுவரையில் ஏற்படவில்லை.

தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்டால், வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முற்படுவார்கள். இது சுகாதாரத்துக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் தேர்தலுக்கான திகதியைக் குறிப்பிட வேண்டாம் என நாம் ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவை கடிதம் மூலமாகக் கேட்டிருந்தோம்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் இதனை தான் வலியுறுத்தவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!