யாழ்ப்பாணத்தில் 44 பேருக்கு சோதனை- யாருக்கும் தொற்று இல்லை!

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று 44 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், எவருக்கும், தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 44 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வர், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 39 பேருக்கே நேற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இவர்களில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!