பெரும் ஆபத்தில் உள்ள வட கொரிய தலைவர் கிம்: வெளியான அதிர்ச்சி தகவல்!

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் அவர் பெரும் ஆபத்தில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. எப்போதுமே மர்மமான நாடாகவே வடகொரியா பார்க்கப்படுகிறது. உலகையே தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கும் நிலையில் தங்கள் நாட்டில் யாரும் வைரஸ் தொற்றால் பாதிக்கவில்லை என வடகொரியா கூறி வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் அவர் பெரும் ஆபத்தில் உள்ளார் என தெரியவந்துள்ளது. உளவுத்துறை மூலம் அமெரிக்கா இந்த விடயத்தை கண்காணித்து வருவதாக, இதில் நேரடி தொடர்பு கொண்ட அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

கிம் ஜாங் கடந்த 15ஆம் திகதி நடந்த தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது அவரின் உடல்நிலையை பற்றிய ஊகங்களை எழுப்பியது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு அரசாங்க கூட்டத்தில் காணப்பட்டார். வட கொரியாவிலிருந்து உளவுத்துறை விடயங்களை சேகரிப்பது மிகவும் கடினமாகவே எப்போதும் உள்ளது. இது அமெரிக்க உளவுத்துறையின் மிகவும் சவாலான இலக்குகளில் ஒன்றாகும். நாட்டிற்குள் கிட்டத்தட்ட ஒரு தெய்வத்தைப் போலவே நடத்தப்படும் தனது தலைவரைச் சுற்றியுள்ள எந்தவொரு தகவலையும் வட கொரியா கடுமையாக கட்டுப்படுத்துகிறது.

உத்தியோகபூர்வ அரசு ஊடகங்களில் அவர் இல்லாதது பெரும்பாலும் அவரது உடல்நிலை குறித்த ஊகங்களையும் வதந்திகளையும் தூண்டுகிறது. கிம் ஜாங் கடைசியாக ஏப்ரல் 11 அன்று வட கொரிய அரசு ஊடகங்களில் தோன்றினார். கிம் ஜாங் உன் 2014 ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் பார்வையில் இருந்து காணாமல் போனார், இது அவரது உடல்நிலை குறித்த ஊகங்களையும் தூண்டியது. பின்னர் சில நாட்களுக்குப் பிறகு தென் கொரிய உளவுத்துறை, கிம் ஜாங்கின் கணுக்காலில் நீர்க்கட்டி அகற்றப்பட்டதாகக் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!