கொழும்பில் இருந்து தப்பி வந்த இளைஞனால் யாழ்ப்பாணத்தில் பரபரப்பு!

கோரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர், அனுமதியின்றி இரகசியமாக பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்பி வந்தவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், அவரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்த சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்தவரே சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு பொருள்களை ஏற்றி வந்த பாரவூர்தியிலேயே அவர் தப்பி வந்துள்ளார்.

தகவலறிந்த வலி.மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள், அவரைத் தேடிக் கண்டறிந்து வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். அவர் தங்கியுள்ள வீட்டில் இருப்பவர்களும் தனிமைப்படுததப்பட்டுள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!