மன்னாரில் தனியார் மருத்துவமனை தீக்கிரை!

மன்னார் பொது வைத்திய சாலைக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று நேற்று மாலை தீக்கிரையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதியில், அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் திடீர் மின் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த தீவிபத்தினால், மருத்துவமனை எரிந்து நாசமாகியுள்ளதுடன் அங்கிருந்த பெருமளவு மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டனவும், தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீவிபத்தினால், 35 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அறிந்த பொலிசார், மன்னார் நகரசபையினர், இராணுவத்தினர், கடற்படையினர் ஆகியோர், பொதுமக்களுடன் இணைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர் என்றும் தகவல்கள் கூறுகின்ற

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!