ரீலங்காவில் அண்மைய நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்துவருகின்றது.
தற்போதுவரை 420 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 142 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள பட்டியல் மூலம் அறியமுடிகின்றது.
அதேபோல் களுத்துறை மாவட்டத்தில் 59 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 33 பேரும், யாழ் மாவட்டத்தில் 16 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்காவில் உள்ள மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களிலேயே இதுவரை கொரோனா நோயாளிகள் இனங்காணப்படவில்லை.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள பட்டியல் மூலம் புலனாகின்றது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!