இலங்கையில் இன்று (27) இதுவரை 44 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக 34 பேரும், இப்போது 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கண்டறியப்பட்ட 44 பேரும் கடற்படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 567 ஆக உயர்ந்துள்ளது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 441 ஆக காணப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!