முப்படையினரை இன்று முகாம்களுக்கு திரும்புமாறு அறிவிப்பு!

விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் அனைவரையும், இன்று முகாம்களுக்கு திரும்ப வேண்டுமென, பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. இதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து வசதிகளை பெற முடியாதவர்கள் அருகிலுள்ள முகாமுக்குச் செல்லுமாறும், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய, மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை முப்படையினரின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!