ஜி7 உச்­சி­மா­நாடு குழப்ப நிலையில் நிறைவு

கன­டாவின் கியூபெக் மாகா­ணத்தில் இடம்­பெற்ற ஜி7 உச்­சி­மா­நா­டா­னது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கனேடிய பிர­த­ம­ருக்கு எதி­ராக கருத்து வெளி­யிட்டு அங்­கத்­துவ நாடு­களால் இணைந்து வெளியிட்ட அறிக்­கையை கைவிட்­ட­தை­ய­டுத்து குழப்பநிலையில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை நிறை­வு­பெற்­றது.

கனே­டிய பிர­த­மரின் செயற்­பா­டுகள் தைரியக் குறை­வு­டை­ய­ன­வா­கவும் சாது­வா­ன­தா­கவும் உள்­ள­தாக டொனால்ட் ட்ரம்ப் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்தார்.

மேற்­படி உச்­சி­மா­நாட்டில் வர்த்­த­கங்கள் தொடர்பில் அங்­கத்­துவ நாடு­க­ளி­டையே பெரும் முரண்­பாடு நில­வி­ய­தாகத் தெரிவிக்கப்படுகிறது. உருக்கு மற்றும் அலு­மி­னிய இறக்­கு­ம­திகள் தொடர்­பான அமெ­ரிக்­காவின் சுங்­க­வ­ரிகள் குறித்து அந்த உச்­சி­மா­நாட்டில் அங்­கத்­துவ நாடு­க­ளி­டையே கடும் அபிப்­பி­ரா­ய­பேதம் காணப்­பட்­டது.

அமெ­ரிக்­காவால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள மேற்­படி சுங்­க­வரி விதிப்­பு­க­ளுக்கு பதி­லடி நட­வ­டிக்­கையை எதிர்­வரும் ஜூலை முதலாம் திகதி முன்­னெ­டுக்கப் போவ­தாக கனே­டிய பிர­தமர் சூளு­ரைத்­துள்ளார்.

இந்­நி­லையில் டொனால்ட் ட்ரம்ப் சிங்­கப்­பூரில் நடை­பெறும் வட கொரிய தலைவருடனான உச்­சி­மா­நாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக விமா­னத்தில் புறப்­ப­டு­கையில் டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் தன்னால் வெளி­யி­டப்­பட்ட செய்­தியில், கனே­டிய பிர­தமர் பொய்­யான தக­வலை வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் உண்­மையில் கன­டாவே அமெ­ரிக்க விவ­சா­யிகள், தொழி­லா­ளர்கள் மற்றும் கம்­ப­னிகள் மீது பாரிய சுங்க வரியை விதித்து வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

கனே­டிய பிர­தமர் மிகவும் நேர்­மை­யற்ற பல­வீ­ன­மான ஒருவர் எனத் தான் கரு­து­வ­தாக அவர் கூறினார்.

டொனால்ட் ட்ரம்ப் வர்த்­தகம் தொடர்­பான சர்ச்சை நில­விய நிலை­யிலும் ஜி7 அங்­கத்­துவ நாடு­களால் இணைந்து வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையை அங்­கீ­க­ரித்து ஆரம்­பத்தில் கைச்­சாத்­திட்­டி­ருந்தார். எனினும் பின்னர் அவர் தனது அங்­கீ­கா­ரத்தை வாபஸ் பெற்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!