மணிவண்ணனிடம் ரிஐடியினர் விசாரணை!

SAMSUNG CAMERA PICTURES
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணணன், நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாதப் விசாரணைப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அதிகாரிகள், நேற்றுக் காலை, யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் உள்ள மணிவண்ணனின் இல்லத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தரணி மணிவண்ணனை அவரது வீட்டில் சந்தித்த ரிஐடி அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாகவே, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத விசாரணை பிரிவினர் தனது வீட்டிற்கு வந்திருந்தனர் என்றும், மாவீரர் தின நிகழ்வில் பங்குபற்றியமை தொடர்பில் அவர்கள் தன்னிடம் வாக்குமூலத்தைப் பெற்றனர் என்றும், சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!