நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தல் – ஒரு நாளைக்கு 7500 ரூபா கட்டணம்!

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர் என்றும், இராணுவ முகாம்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்படுபவர்கள் இதற்காக விடுதிகளுக்கு பணம் செலுத்த வேண்டும். விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு சம்மதம் தெரிவிக்கும் இலங்கையர்கள் மட்டுமே நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து இன்று 260 பேர் நாடு திரும்ப உள்ளதாகவும், இவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு நாட்டில் பல பாகங்களிலும் உள்ள விடுதி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமாக ஒரு நாளைக்கு 20,000 – 35,000 வரை விடுதி அறை ஒன்று வாடகைக்கு விடப்படும் எனவும், ஆனால் தனிமைப்படுத்தல் காரணத்திற்காக ஒரு அறைக்கு 7,500 ரூபா அறவிடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!