குண்டுதாரிகளுக்கு பயிற்சியளித்தவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கற்பிட்டியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், தாக்குதல்தாரிகளை அழைத்து வந்து, தான் பொறுப்பாகவுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பயிற்சி நிலையத்தில் விரிவுரை நடாத்தியதாக தெரிவித்து அவரை கைது செய்துள்ளதாக, ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

சந்தேகநபர், குண்டுதாரிகளின் அடிப்படைவாதத்தை குறித்த பயிற்சி முகாமில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரவித்தார்.

குறித்த பயிற்சி நிலையம், அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பெயரில் உள்ளதாக தெரிவித்த அவர், குறித்த சந்தேகநபர் அப்பயிற்சி நிலையம் மற்றும் குறித்த அரச சார்பற்ற நிறுவனம் ஆகியவற்றின் பொறுப்பாளராக செயற்பட்டு வந்துள்ளதாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!