கொழும்பில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.
கடந்த சனிக்கிழமை சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது.
இதில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி விடைபெறும் அதுல் கெசாப், தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
இதன்போது. நினைவுப் பரிவுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!