மைத்திரிக்கு பொதுஜன முன்னணி ஆதரவளிக்காது – பீரிஸ்

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு அளிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தற்போதைய அரசாங்கத்தின் ஒரு அங்கம் மாத்திரமல்ல. அவரே உயர்பீடமாகவும் இருக்கிறார்.

2020 அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஒத்த கொள்கையுடைய கட்சிகளுடன் பரந்துபட்ட கூட்டணியை அமைக்கும்.

தற்போதைய அரசாங்கத்தில் நாட்டு மக்கள் பெரும் துயரங்களை அனுபவிக்கிறார்கள். அதனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க அனுமதிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!