ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் சிறைக்கைதிகள் விடுதலை

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்த நான்கு சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பிற்கு அமைய திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த நான்கு சிறைக்கைதிகள் இன்று(7) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தாபரிப்பு, சாராயம் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களை விடுதலை செய்யும் நிகழ்வு திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வாவின் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதான ஜெயிலர் சமந்த லியனகே, புனர்வாழ்வு உத்தியோகத்தர், சிறைச்சாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!